அனுமதி பெற்ற நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் பூட்டு

  நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி அநுராதபுரத்தில் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை மூடப்படும் என்று திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம் மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் நடைபெறவுள்ளது. அதேவேளை மே 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை பொசன் வாரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.