யாழில் தனியார் வகுப்புகளிற்கு பொலிஸ் பாதுகாப்பு!

 யாழ்.மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

மாவட்ட  ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானமாக எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் உறுதியளிக்கப்பட்டது.

அதன்படி கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்க ப்பட்டுள்ளது.

அதோடு பாதுகாப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதாகவும் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருந்தார்.