ஆடுமேய்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

  இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஆடு மேய்த்த பெண்ணை அடித்து கொலை செய்து உடலை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுரேந்திரா தாக்கூர் என்ற 25 வயது இளைஞர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார். பின்னர் கொலை செய்த சாந்திதேவியின் உடலை சாப்பிட்டுள்ளார்.

 ஷாம்பி போன்ற நடத்தை

வழக்கத்திற்கு மாறான ஷாம்பி போன்ற நடத்தையை வெளிப்படுத்தியதால் உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்தவ ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது 10க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளார்.

அவரிடம் கடி வாங்கிய 10 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் உள்ள மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் அவர் வெறிநாய்க்கடி, வைரஸ் மூளைக்காய்ச்சல் அல்லது ஆபத்தான மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வாலியருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் குடிப்பழக்கத்தால் அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்து உள்ளமை தெரியவந்துள்ளது.

மும்பையில் உள்ள அவரது குடும்பத்தினரை கண்டுபிடிக்க போலீஸ் குழு புறப்பட்டு சென்ற போதும் அவரது குடும்பத்தினர் எங்கே இருக்கின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர் நேற்று காலை குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.