விமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளியேனும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என மீள்குடியேற்றத் துறை அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் வீடமைப்புத் திட்டத்தினை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் முக்கியமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு பொதுமக்களின் காணிகள் ஒரு துளி கூட அபகரிக்கப்படமாட்டாது. மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். இது ஒரு பிராந்திய விமான நிலையமாகவே செயற்படும். மக்கள் இதனை உணர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றார்.