இதுவரை காலமும் உயர்பாதுகாப்பு வலையம் என்று சொல்லி , மக்கள் செல்ல விடாது இலங்கை ராணுவம் தடுத்து வந்தது. தற்போது வசாவிளானில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூசைகளை நடத்த அனுமதிக்கப்பட்ட நிலையில். அங்கே செல்லும் வயதானவர்களுக்கு பெரும் உதவிகளை புரிவது போல ராணுவத்தினர் நாடகமாடி வருகிறார்கள். பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் பாதை எங்கும் முள்ளும், புதருமாக இருக்கிறது. அதனூடாக வரும் முதியவர்கள் கால்களில் அது நிச்சயம் குத்தும். உடனே ஒடிச் சென்று அவர்களுக்கு மசாஜ் கொடுக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர். போதாக்குறைக்கு பின்னால் நிற்கும் சில ராணுவத்தினர் உடனே அதனை கமராவில் படம் பிடித்து சர்வதேச ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கிறார்கள்.