கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கல்கத்தா நோக்கி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று அதிகாலை கல்கத்தா நோக்கி செல்லவிருந்த எம்.ஜீ.331 இலக்க விமானத்திலேயே இவ்வாறு இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 150 இற்கும் அதிகமான தமபத்தீவ யாத்திரிகர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக லசித் மலிங்கவும், இந்தப் போட்டியை பார்வையிடுவதற்காக தினேஸ் சந்திமாலின் மனைவியும் குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.