உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பப்ஜி மோகத்தால் உயிரை விட்ட யாழ் இளைஞன்

யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (27) காலை...

யாழில் இருந்து தமிழகம் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த...

சாதாரணதர பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களத்தினால் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் மே மாதமும், இவ்வாண்டுக்கான உயர்தர பரீட்சைகள் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் ஒக்டோபர் மாதமும் இடம்பெறும்...

கோட்டாபயவுக்கும் மஹிந்தவுக்கு எச்சரிக்கை விடுத்த சந்திரிகா

''வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்." என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

நானாகவே பதவியை விட்டு விலகுவேன் : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

"பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பக்கம்தான் இருக்கின்றார்கள். பெரும்பான்மையினரின் ஆதரவு எனக்கு இருக்கும் வரை நான்தான் பிரதமர். பெரும்பான்மை ஆதரவு எனக்கு இல்லாவிட்டால் நானாகவே விலகி விடுவேன்.'' என பிரதமர் மகிந்த ராஜபக்ச...

எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக வவுனியாவில் பூட்டப்பட்ட பேக்கரிகள்

வவுனியாவில் இயங்கி வருகின்ற வெதுப்பகங்கள் சில எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரின் குட்செட் வீதி மற்றும்...

யாழிற்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்த இந்து கல்லூரி மாணவர்கள்

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்து கொண்டு, யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடத்தைத் தட்டிச்...

றம்புக்கண துப்பாக்கிசூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து பொலிஸார் அதிகாரிகளையும் கைது செய்ய உத்தரவு

றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸாரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு...

பொது பணிப்புறக்கணிப்பிற்கு அரச, தனியார் பேரூந்துகள் விடுத்துள்ள அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிராக நாளை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் அரச மற்றும் தனியார் பேரூந்துகள் வழமைப்போன்று இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரச பேரூந்துகள் உரிய சேவைகளை நடத்தும் என்று இலங்கை போக்குவரத்து...

வவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

வவுனியாவில் அண்மைக்காலமாகத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். அந்தவகையில் இறம்பைக்குளத்தில் நேற்றையதினம் தனிமையிலிருந்த வயோதிப பெண்ணிடம் கத்தியைக் காட்டி பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இதேவேளை...