பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாழடைந்த வீட்டில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைக்குண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திரியாய் 5 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரான புஸ்பராசா என்பவரின் வீட்டிலேயே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்தோடு குறித்த வீட்டின் உரிமையாளர் யுத்த காலத்தின் போது திருகோணமலை நகர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவருடைய உறவினர்கள் காணியை சுத்தம் செய்ய முற்பட்டபோது வீட்டுக்கு முன்னால் கைக்குண்டை கண்டதாகவும் இதனையடுத்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் திருகோணமலை சர்தாபுற விசேட பொலிஸ் அதிரடி படையினர் குறித்த குண்டை மீட்டுள்ளதாகவும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றது அடுத்து செயலிழக்கச் செய்ய உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.