தெல்லிப்பழை திருட்டுக் கோஷ்டி சிசிரிவி பதிவால் சிக்கினர்!

தெல்லிப்பழை பகுதியில் இரு நாள்களுக்கு முன் வீடு ஒன்றை உடைத்து திருடிய இருவர் சிசிரிவி பதிவை ஆதாரமாக கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட ஐ போன் ஒன்று, நாலு சைக்கிள்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன..

சுன்னாகம் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.