யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

திக்கம்- அல்வாய் பகுதியை சேர்ந்த வரோதயம் மேரி ஜோசப் என்ற பெண்ணே வாள் வெட்டுக் குழுவின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) மாலை, குறித்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த வாள்வெட்டு குழு, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அவரின் மீதும் வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.