யாழ்.பருத்தித்துறையில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீதும் அங்கு உள்ள பெண்ணொருவர் மீதும் வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (2021.07.29) பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கம் அல்வாய் பகுதியில் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரோதயம் மேரி ஜோசப்பின் (சந்திரா) என்ற பெண்ணே இவ்வாறு வாள்வெட்டிற்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.