இதுவரை 2, 423 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 1,017 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 1,406 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, இன்று இதுவரையில் 2, 423 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 316,192 ஆக அதிகரித்துள்ளது.