இலங்கையில் அதிகரித்த கொரொனா மரணங்களின் எண்ணிக்கை….!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி 15 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , நாட்டில் இதுவரை , உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நேற்றையதினம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.