மண்டானை திருக்கோவில் பகுதியில் முதலை கடிக்கு உள்ளாகி மீனவர் ஒருவர் பலி!

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.

மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த 55 வயதுடைய இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.