யாழில் ஊடகவியலாளரை தாக்கியவர் பிடிபட்டார்…!



யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஊடகவியலாளரை தாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 31ஆம் திகதி மதியம் கடமை முடித்து சாவகச்சேரி கச்சாய் வீதியால் வீடு திரும்பிய ஊடகவியலாளரை வேனில் வந்தவர்கள் மோத முற்பட்டதுடன், அவரை தாக்கி காயப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக ஊடகவியலாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அதன் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.