யாழ். மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஸ்டம் : வெளியான விபரம்!

யாழ்ப்பாணம் – பருத்துறை மீனவர்களால் நேற்று 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூறப்பட்ட 14 சுறா மீன்கள் 2 ஆயிரம் கிலோவுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

பிடிபட்ட சுறா மீன்களின் பெறுமதி 19 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், குளிரான வாகனத்தில் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதனால் அப்பகுதி மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.