யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இருவர்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் கோப்பாய் மற்றும் அரசடி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ் பரிசோதகர் மேனனுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய கோப்பாய் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 10 போதை ஊசிகள், இரண்டு கிராம் சிரின்க்ஸ், ஒன்றரை கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.