14 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த பிக்கு நால்வரை கைது செய்த பொலிஸார்!

மொனராகலை தொம்பகவெல பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் அப்பிரதேச மத ஸ்தலமொன்றின் தலைவர் உட்பட நால்வரை தொம்பகவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி தொம்பகஹவெல பிரதேசத்தில் இருந்து தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுமியின் உறவினர்கள் இருவரின் உதவியுடன், மத ஸ்தலத்தின் தலைவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட தலைவரின் சகோதரர்களில் ஒருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் மேற்படி மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உடந்தையாக இருந்த மாணவியின் உறவினர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.