யாழ்.மாவட்ட கட்டளை தளபதி இடையே அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட, கடல் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 31) சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள மாடு திருட்டு, போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் காணி விடுவிப்பு, பாடசாலை மைதானம் போன்ற பொது இடங்களை புனரமைப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவிக்கப்பட்டது.