யாழில் புத்தாண்டு தினமான நேற்றையதினம் இடம்பெற்ற விபரீதம்!

யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 34 வயதுடைய நபரே பலத்த காயமடைந்துள்ளார்.

கல்லுண்டாய் பிரதேசத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டோர் சரமாரியாக வாள் வெட்டுத் தாக்குதல்களை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த நபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த வன்முறைச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.