மண்ணெண்ணெய் குடித்த ஆண் குழந்தை பரிதாப மரணம்

மண்ணெண்ணெய் குடித்த ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம்  நிட்டம்புவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.வீட்டில் கொள்கலன் ஒன்றில் வைகப்படிருந்ததை குழந்தை குடித்துள்ளது என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வருகின்றது. அதன் பின்னர் குழந்தை மண்ணெண்ணெய் குடித்த பின்  வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது