யாழில் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

யாழில் வீட்டு வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் வீட்டில் உள்ள பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அத்தியடி பகுதியில் கணவரை பிரிந்து ஒரு பிள்ளையுடன் வசித்து வந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் நீண்ட காலமாக கொலை செய்த நபர் ஆட்டிற்கு குழை வெட்டுதல் மற்றும் வீட்டு வேலைகளுக்கு என சென்று வந்த நிலையில் நேற்றைய தினமும் வேலைக்கு சென்று இரவு வேளையிலும் வேலை செய்த வண்ணம் அங்கு நின்றிருந்தார் அப்போது குறித்த பெண்ணின் மகள் வீட்டின் அறையில் இருந்துள்ளார் அப்போது வீட்டின் வெளிய அவரது தாய் கத்தும் சத்தம் கேட்டது எனவும் வெளியே வந்து பார்த்த போது தயார் தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறியுள்ளார்

இது தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் மரக்கடை ஒன்றினால் பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு சென்றதாக கூறியுள்ளனர்

இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதோடு தடயவியல்  பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்