யாழில் கணவன் உயிரிழந்த செய்தியை கேட்ட அடுத்த நொடி தனது உயிரை மாய்த்த மனைவி !

யாழில் கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவானது நேற்று யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது கணவர் உயிரிழந்தார்.

கணவரின் மரணச் செய்தியை தொலைபேசியில் கேள்விப்பட்ட மனைவி தற்கொலைக்கு முயன்ற யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.