பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

காலி மாவட்டத்தின் கரந்தெனிய – மஹகொட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாயும் தந்தையும் வீட்டில் இருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர்கள் தேடியதில், அருகில் உள்ள நிலத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து கிடந்தது தெரியவந்தது.

சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.