எரிபொருள் விற்ப்பனையில் வீழ்ச்சி!

நாட்டில் எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் பெறச் செல்பவர்களில் பாரிய வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எரிபொருள் கொள்வனவு செய்பவர்களின் வீதம் சுமார் முப்பது வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னர் ஒரு நாளிலே தீர்ந்து போகும் எரிபொருள் கையிருப்புகள் தற்போது இரண்டு நாட்கள் வரை நீடிக்கின்றது.

மேலும் தொடர்ச்சியாக எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதால் மக்கள் எரிபொருளினை விட ஏனைய தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்