சிங்கள மொழியில் அனுப்பிய பொலிஸ் கட்டளையை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் கட்டளையினை நேற்றைய தினம் திருப்பி அனுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு பொலிஸ் கட்டளை ஒன்றினை பொலிஸ் உத்தியோகஸ்தர் சிங்கள மொழியில் கொண்டு சென்று கொடுத்துள்ளார்.அதனை வாங்க மறுத்து தமிழ் மொழியில் அனுப்புமாறு மீண்டும் திருப்பி கொடுத்துள்ளார்.

எனக்கு சிங்கள மொழி வாசிக்க தெரியாது ஆகையால் தமிழில் எழுதி வாருங்கள் என திருப்பி அனுப்பியுள்ளார் அதனை வாங்கி சென்ற பொலிஸ் அதிகாரி மீண்டும் தமிழ் மொழியில் எழுதி வந்து கொடுத்துள்ளார்.