யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்க முயன்ற நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நபர் ஒருவர் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை கைது செய்தனர் கைது செய்யபப்ட்ட நபரிடம் இருந்து  750 கிராம் போதை கலந்த பாக்கு அவரது உடமையில் இருந்து மீட்க்கபப்ட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.