மனைவி இத்தாலி வர மறுத்ததால் உயிரை மாய்த்த கணவன்

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் இத்தாலியில் வசித்து வரும் நிலையில் அவரது மனைவியை பல தடவைகள் இத்தாலிக்கு அழைத்தும் அவர் இத்தாலிக்கு வர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இறந்த நபர் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த   26 வயதினை உடையவர் அவர் கடந்த ஜந்து மாதங்களுக்கு முன்னர்  26 வயதினை உடைய  பிபிலதெனிய எனும் இடத்தினை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் முடித்த நிலையில் தனது மனைவியை பலமுறை இத்தாலிக்கு வருமாறு கேட்டுள்ளார்.

எனினும் அவரது மனைவி இத்தாலி செல்ல மறுத்துள்ளார்.இந் நிலையில் குறித்த பெண்ணின் கணவர் மன விரக்தியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கு வசிக்கும் உயிரிழந்த நபரின் சகோதரர் கூறியுள்ளார் அத்துடன் உயிரிழந்த கணவனின் உடலினையும் அவரது ,மனைவி வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆகையால் இறந்தவரின் உடல் அவரது சகோதரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது