இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகை மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட  760 கிலோ பீடி இலைகள் பொலிசாரால் மீட்க்கப்பட்டுள்ளன.இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சாப் பொதிகளை கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட உள்ளன என  பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைத்த இரகசிய தகவலினை அடிப்படையில் பொலிசார் நேற்றைய தினம் (20.02.2023)அன்று தேடுதல் மேற்கொண்ட வேளை

அதன் போது 19 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 760 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெருமதி மட்டுமே சுமார்  1.5 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேடுதலின் போது யாரும் கைது செய்யபப்டவில்லை எனவும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை கற்பிட்டி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.