யாழில் 15 வயதான இரண்டு சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

யாழில் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் தனித்தனி சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சிவராத்திரி அன்று குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் 15 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

கோயிலில் இருந்து குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, ​​வீட்டுக்குள் இருந்த நபர் ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த மற்றுமொரு 15 வயது சிறுமியை 23 வயதுடைய கோப்பாய் இளைஞன் குடும்பம் நடத்திய நிலையில் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறம் சமீப காலமாக இவ்வாறான சமூக சீர்கேடுகள் யாளியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.