கனடாவில் வாழும் யாழை சேர்ந்த பெண் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்

தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் யாழை சேர்ந்த நபர் ஒருவர் யாழில் அவருக்கு சொந்தமாக உள்ள காணியை யாழில் காணி அற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ள சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வேலணை- கரம்பொன் மேற்கை சொந்த இடமாகக் கொண்ட வரதா சண்முகநாதன் என்ற நபரே தனக்கு சொந்தமாக உள்ள காணியினை இரண்டு பரப்பு வீதம் ஒன்பது குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

அவர்களுக்கான உறுதிப் பத்திரம்  கடந்த சனிக்கிழமை மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி ஆலய மண்டபத்தில் அப்பகுதியின் கிராம சேவையாளர் புருசோத்தமன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது அன்றைய நிகழ்வில் வரதா சண்முகநாதன் என்பவரை போன்று புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களும் காணி அற்றவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது