அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

  இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

500 மில்லியன் டொலர் மோசடி 

500 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறி மோசடி தொடர்பில் கப்ரால் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்று கூறிய சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை நீதவான் ஏற்றுக்கொண்ட நிலையில் தீர்ப்பு வழங்கினார்.