யாழில் பறக்க விடப்பட்ட புகைக்கூண்டு தொடர்பில் வெளியாகிய உண்மை செய்தி!

யாழ்ப்பாண மாவட்டம் – வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திர விழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்த செய்தி தொடர்பில் உண்மை தன்மை வெளியாகியுள்ளது.

விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீடொன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் சில நபர்களால் வெளியிடப்பட்ட புரளி என தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் மேற்குறித்த புகைக் குண்டு எரியாமல் பாதுகாப்பாக ஒரு வீட்டின் முன்புறமாக வீழ்ந்துள்ளமை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.