யாழில் வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்ட முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் வீடொன்றிலிருந்து நேற்றையதினம் (25-05-2023) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்துள்ளார்.

இச்சம்பவத்தில், 65 வயதான உத்தரவேல் புவனேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.