யாழில் மரண செய்தி கூற சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

  யாழில் உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் யாழ் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 கார் மோதி பலி

சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை சனிக்கிழமை (27) பார்வையிட சென்றபோது , சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக வைத்தியசாலையில் இருந்து , தனது துவிச்சக்கர வண்டியில் விரைந்துள்ளார்.

இதன்போது , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த கார் மோதி சம்பவ இடத்திலையே தகவல் சொல்ல சென்றவர்  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்  கார் சாரதியை கைது செய்த   சாவகச்சேரி பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.