எரிபொருளை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (02.06) எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு நீண்ட வரிசை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலினைப் பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதனை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எரிபொருட்களின் விலைகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளுக்கான முன்கூட்டிய பதிவினை மேற்கொள்ளமையினால் இவ் நிலமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.