பேருந்துகளில் பெண்களுக்கு ஏற்ப்படும் அருவருக்கத்தக்க செயல்

இலங்கையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பல்வேறு வகையில் துஷ்பிரயோகம் இடம்பெறுதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதேவேளை, பேருந்துகளில் பயணிக்கும் சில இளைஞர்கள், முதியவர்கள்  பெண்களிடம் சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ்களில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலையில், தென்னிலங்கையில் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர், யுவதியிடம் தவறாக நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது சமூக வலைத்தளத்தில் காணொளியை பதிவிட்டு பெண்களை எச்சரிக்கை செய்துள்ளார்.