யாழில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது!

யாழில் முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீனவர்களுடன் 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கடற்படையினர் மேற்கொண்ட தேடல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு!
Next articleநாட்டில் வாகன விலைகள் அதிகரிப்பு!