கிளிநொச்சியில் திருமணம் முடித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு ! வெளியான காரணம் !

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவி சிறு வயதில் திருமணம் செய்து கல்வியை தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் மாணவி உயிரிழந்த நிலையில் இச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleசர்வதேச நாணயநிதியத்திற்கு எதிராக வவுனியாவில் தொடர் போராட்டம்!
Next articleயாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது !