யாழில் உயிரிழந்த இளம் பூசகர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளர் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூசகர் ஒருவரே இவ்வாறு  இன்றைய தினம் (08-06-2023) உயிரிழந்துள்ளார்.

குறித்த பூசகர் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.