வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலார்கள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்டு பெண்களுக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் இன்றைய தினம் (09-06-2023) தெரிவித்துள்ளனர்.

இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும்.

குறித்த 7 பாலியல் தொழிலாளிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபசாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.