யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (10) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் பிக்கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எதிர் எதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணம் செய்த அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.