தீவு ஒன்றில் சிக்கிதவிக்கும் இலங்கையர்கள் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் !

டியாகோ கார்சியாவில் கடந்த 20 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் உள்ள ப்ரித்தானியாவிற்கு சொந்தமான சிறிய தீவு ஆன டியாகோ கார்சியாவில் இலங்கையை சேர்ந்த 89 குடியேற்றவாசிகள் சிக்குண்டுள்ளனர்.

சட்டவிரோத பயணங்களின் போது படகுகள் ஆபத்தில் சிக்கியவேளை காப்பாற்றப்பட்டவர்களே இவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இராணுவத்தினருக்காக முன்னர் அமைக்கப்பட்ட கொரோனா கூடாரங்களிலேயே இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், டியாகோ கார்சியாவில் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக ஒரு பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு உண்ணாவிரதப் போராட்டங்களும் இடம்பெறுகின்றன என தெரியவருகின்றது.