விண்ணிற்கு  41 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பி வைத்த சீனா!

விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் சாதனை படைத்துள்ள நிலையில் அந்த வரிசையில் சீனாவும் போட்டி போட்டு வருகிறது.

இதன்படி சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த சீன விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2டி என்ற ராக்கெட் செலுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த ராக்கெட் அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள்கள் வணிக தொலையுணர் சேவைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை சரிபார்க்க பயன்படுத்தப்படும் என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.