கொழும்பில் இளம் தமிழ் யுவதி சடலமாக மீட்பு!

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற பெண்ணே அவரது வீட்டில் இன்று (17) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையில் தோற்றியிருந்தார் என்று தெரியவந்துள்ளது.

இச் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் யுவதியின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.