இலங்கை வரும் இந்திய நீர் மூழ்கி கப்பல்!

இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உலகளாவிய பெருங்கடல் வலயம்’ என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச யோகா தினத்தின் 9 ஆவது பதிப்பை நினைவுகூரும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.