வேகக் கட்டுப்பாடை இழந்து விபத்திற்குள்ளான பஸ்

பஸ் ஒன்று மொரட்டுவை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பஸ் நிலையம், மின்மாற்றி மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து திங்கட்கிழமை (19) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாணந்துறை – நுகேகொட பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை பஸ் இழந்ததால் விபத்து ஏற்பட்டது.

விபத்தில் மின்மாற்றி மற்றும் பஸ் நிலையத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன், நடத்துனரும் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணும் சிறிய காயங்களுக்குள்ளாகினர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸாரினால் மேலதிக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.