மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மலையகப் பகுதிக்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு நேர ரயில் மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.