வயோதிப பெண்ணை கடித்து குதறிய நாய்

அஹங்கம பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண்

அஹங்கம – திகபெத்த, கோதாகொட கமகே பகுதியைச் சேர்ந்த தயாவதி என்ற 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் தெரிவைக்கப்பட்டுள்ளது.

நாய் தாயின் மார்பைக் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய் கடித்ததில் பலத்த காயங்களுக்குள்ளான பெண், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.