புதிய வணிக நிறுவனத்தை ஆரம்பித்த உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலோன் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படும் எலோன் மஸ்க் மற்றொரு தனித்துவமான பணியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளார். தற்போது விரிவடைந்து வரும் ChatGPTக்கு மாற்றாக உருவாக்குவதே அவரது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதில் எலோன் மஸ்க் முன்பு நட்பற்ற பதிலைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கக் கூடாது, இத்துறையை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும், செயற்கை நுண்ணறிவு காரணமாக மனித இனம் அழிக்கப்படலாம்” என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.